உன் விரலைப் பிரிந்த
நகத்துண்டு,
உன்னை விட்டு உதிர்ந்த
தலை முடி,
உன்னை விட்டுத் தவறிய
கைக்குட்டை என
எதுவுமே என்னிடம் இல்லை!
உன்னை
வேண்டாமென்று வெறுத்தவை
எனக்கெதற்கு?
கன்னம்
உஷ்........... கவிதைகள் அணைத்தும் கன்னம் வைக்கப்பட்டவை உரியவரிடம் சொல்ல வேண்டாம்
Thursday, February 23, 2012
Tuesday, February 7, 2012
SMS
நீ பேசப்போவதில்லை
என பறை சாற்றுவதுக்கு
இப்படி ஓயாம SMS அனுப்பி
என்ன கொடுமப்படுத்துரதுக்கு
பதில்
என்னிடம் நீ
பேசித்தொலைத்திருக்கலாம்
கோபப்புயல்
என்னைக்காவது
உண்மையை சொல்லி
இருக்கியா என
நீ கோபமாக
கேட்டபொழுது
நான் பரிதாபமாக முகத்தை
வைத்துக்கொண்டு
கோபதிலயும் நீ
அழகாத்தாண்டி இருக்கே
எனக்கூறியதும்
அதுவரை
உன் முகத்தில் நிலைகொண்டிருந்த
கோபப்புயல்
வெட்கப் புயலாக
மாறியது !
பொய்
இனிமே என் கிட்டே
பொய் சொன்னா
அவ்வளவுதான்
என கடுமையாக
முகத்தை வைத்துக்கொண்டு
சொல்கிறாய்
‘சாரி இனிமே
நான் பொய்யே
சொல்ல மாட்டேன்’
என நான் மீண்டும் ஒரு
பொய் சொன்னால்தான்
நீ சிரிக்கிறாய்!
பொய் சொன்னா
அவ்வளவுதான்
என கடுமையாக
முகத்தை வைத்துக்கொண்டு
சொல்கிறாய்
‘சாரி இனிமே
நான் பொய்யே
சொல்ல மாட்டேன்’
என நான் மீண்டும் ஒரு
பொய் சொன்னால்தான்
நீ சிரிக்கிறாய்!
ஊடல்
அவளையே பார்த்துக்கோ
என்னை விட்டு விடு
என என்னிடம்
இன்றைய ஊடலை
ஆரம்பிக்கிறாய்
நான் உன்னிடம்
பேசப்போவதில்லை
என என்னிடம்
பேச ஆரம்பிக்கிறாய்
என்னை விட்டு விடு
என என்னிடம்
இன்றைய ஊடலை
ஆரம்பிக்கிறாய்
நான் உன்னிடம்
பேசப்போவதில்லை
என என்னிடம்
பேச ஆரம்பிக்கிறாய்
சீக்கிரம்
ஒவ்வொரு முறையும்
சீக்கிரம் போகவேண்டும்
என்கிறாய்
நமது சீக்கிரம்
அவ்வளவு சீக்கிரமாய்
வருவதில்லை !
Subscribe to:
Comments (Atom)